×

பூதப்பாண்டி அருகே பரபரப்பு; குளக்கரையில் கொட்டியுள்ள மருத்துவ கழிவுகளால் ஆபத்து: கொரோனா அச்சத்தில் மக்கள் பீதி

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே குளக்கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் மக்கள்  கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் ஊரில் பேச்சாங்குளம் உள்ளது. இந்த ஊரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தினமும் ஏராளமான மக்கள் இக்குளத்தில் குளிப்பது,  அந்த நீரை வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி பொதுமக்கள் பேச்சாங்குளம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது குளத்தின்கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மருத்துவமனை ஊசி, பஞ்சு, மருந்து பாட்டில்கள், காயத்துக்கு கட்டும் துணிகள் போன்றவை குவியலாக கிடந்தன. ஏற்கனவே கடந்த 3 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தால் இப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. இதை பயன்படுத்தி வெளியூர் சமூக விரோதிகள் மருத்துவ கழிவுகளை இங்கு வந்து கொட்டி சென்றனரா? அல்லது பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து கொட்டப்பட்டதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்தநிலையில் தற்போது அந்த வழியாக  பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த மருத்துவ கழிவுகள் கொரோனா ேநாயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்குமோ என அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.தற்போது மழை காலம் என்பதால் மருத்துவ கழிவுகள் மழை பெய்யும் போது குளத்தில் கலந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் குளத்து நீரை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா 2ம் அலை குமரியில் வேகமாக பரவும் வருகிறது. இந்த சூழ்நிலையில் குளக்கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் கொரோனா தொற்று பரவுமோ என்ற கடும் பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அதிரவு நடவடிக்கையில் இறங்க வேண்டும். மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பூதப்பாண்டி அருகே பரபரப்பு; குளக்கரையில் கொட்டியுள்ள மருத்துவ கழிவுகளால் ஆபத்து: கொரோனா அச்சத்தில் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Bustle ,Bhuthapandi ,Bhootapandi ,Boothpandi ,Dinakaran ,
× RELATED குமரியில் அடுத்தடுத்து விபத்து 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் பரிதாப சாவு