×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடை மீது ஏறி தேவாரம் பாட முயன்ற 50 பேரை கைது செய்தது போலீஸ்..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாட வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. கொரோனா தொற்று காரணமாக நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் யாரும் ஏற கூடாது என தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். ஆனால் இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு தெய்வ தமிழ் பேரவை என்ற அமைப்பு சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் படுவோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை, தெய்வ தமிழ் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் கோயிலின் உள்ளே செல்ல முற்பட்டனர். அச்சமயம் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கோயிலில் ஓரத்தில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடுவோம் என்ற கோரிக்கையோடு வாத்திய கருவிகளை முழங்கியபடி அவர்கள் சென்றபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். பலர் வாகனங்களில் ஏற மறுத்ததால் போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். 


Tags : Sitambala ,Chidambaram Natarajar Temple , Chidambaram temple, Thevaram, arrested
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...