×

காவல் துறை முன்னாள் ஐஜி மறைவு

சென்னை: காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு முன்னாள் ஐஜி சுப்பையா ஐபிஎஸ் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பிறந்தவர் சுப்பையா. இவர் தமிழக காவல்துறையில் முதன்முதலில் மாயவரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை 1978ல் துவக்கினார். அதன்பின் சென்னை செம்பியத்தில் காவல்துறை உதவி ஆணையராகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து வருடம் காவல்துறை கண்காணிப்பாளராகவும், அதன்பின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையிலும் பணியாற்றிய இவர், திருச்சி சரக டிஐஜியாக 1994ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன்பின் தெற்கு ரயில்வே ஐஜியாக பணியாற்றிய இவர், இறுதியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஐஜியாக திறம்பட பணியாற்றி, கடந்த 2002ம் ஆண்டு காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தநிலையில் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சுப்பையா ஐபிஎஸ், நேற்று முன் தினம் மாலை 7 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மதியம் 1 மணியளவில் வில்லிவாக்கம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : IG , Former IG of Police dies
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு