×

திருவாரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகைக் கடைக்காரர் பலி: பாதிக்கப்பட்ட உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூர்: திருவாரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபட்டனர். குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். மளிகை கடை நடத்திவரும் இவர், கும்பகோணத்தில் பொருட்களை வாங்கி கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஐயப்பன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூந்தோட்டம் நாச்சியார் கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களில் எரவான்சேரி காவல்துறையினர் சமரசம் செய்து வைத்தனர். விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.      


Tags : Tiruvarur , Thiruvarur, vehicle, grocer, victim, relatives, picket
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...