சென்னை, பிப். 25: 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்தனர். இந்நிலையில் தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிம்பு மீது பதியப்பட்ட வழக்கையும் ரத்து செய்தார்.