×

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று வேலையாட்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறி கட்டடம் முழுவதுமாக தரைமட்டமானது. இச்சம்பவத்தில், கொட்டாம்பட்டியை சேர்ந்த ராமர், ஜெயராஜ், தங்கவேல், கண்ணன் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடலை மீட்டு வருகின்றனர். வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா? என கட்டிட இடிபாடுகளை அகற்றி தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர், தாசில்தார், காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Govilbati, Thutukudi district , Thoothukudi, Kovilpatti, Fireworks Factory, Fire
× RELATED தூத்துக்குடி மாவட்டம்...