×

அதிமுகவில் தலைமையே கிடையாது!: இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்..செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: அதிமுகவில் தலைமையே கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும் என ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம்.

அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை என தேர்தல் தோல்வி குறித்து செல்லூர் ராஜூ புது விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும்; மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக வளரும் கட்சி என்பதால் 3வது பெரியகட்சி என அண்ணாமலை சொல்கிறார் என்று கூறினார்.  நடந்து முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு இடங்களிலும் பெரும் வெற்றி பெற்ற திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,Cellur ,Raju , AIADMK, Chief, Cellur Raju
× RELATED பாஜவில் இருக்கிறது எல்லாம் திருட்டு...