×

வந்தவாசி நகராட்சியில் வெற்றிபெற்ற 6 சுயேட்சை வேட்பாளர்கள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்..!!

சென்னை: வந்தவாசி நகராட்சியில் வெற்றிபெற்ற 6 சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கைப்பற்றிய நகராட்சிகளின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 4வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் பிபிஜான் முகமது அலி, 12 வது வார்டில் வெற்றிபெற்ற ரிஹானா செயத் கரீம் மற்றும் 21வது வார்டில் வெற்றிபெற்ற ஜெயபிரகாஷ் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

வெற்றிபெற்ற சிலமணி நேரங்களிலேயே 3 சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் 3 பேர் திமுகவில் இணைந்ததன் மூலம் வந்தவாசி நகராட்சியில் திமுகவின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வந்தவாசி நகராட்சியும் திமுக வசமாகியுள்ளது. திமுக வென்ற நகராட்சிகளின் எண்ணிக்கையும் 135 ஆக அதிகரித்திருக்கிறது.


Tags : Vandavasi ,DMK ,Minister ,EV Velu , Vandavasi Municipality, Independent Candidates, E.V.Velu, DMK
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...