×

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் கட்சி அராஜகம் குறித்து வீடு வீடாக தெலுங்கு தேசம் கட்சியினர் துண்டு பிரசுரம்-சித்தூரில் எம்எல்சி வழங்கினார்

சித்தூர் : ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் அராஜக செயல்கள் குறித்து சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினார்.
சித்தூர் ரூரல் மண்டலம் என்.ஆர்.பேட்டை கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சி துரை பாபு ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள், முன்னாள் முதல்வர் சந்திரபாபு செய்த நல திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே துண்டுபிரசுரம் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஏழை எளிய மக்களுக்கு ஒரு நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. முன்னாள் முதல்வர் சந்திரபாபு முதலமைச்சராக இருந்தபோது முதியோர் உதவித்தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளும் அரசு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். தற்போதுள்ள ஆட்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் சித்தூர் மாவட்டத்தில் சிட்டி அமைத்து ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களை கொண்டுவந்தார். இதனால் சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலம் முழுவதும் படித்து வேலையில்லா இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வந்தார்கள். தற்போது உள்ள துக்ளக் ஆட்சியில் இதுவரை ஆந்திர மாநிலத்தில் ஒரு தொழில் நிறுவனங்கள் கூட நிறுவ முன்வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் நிறுவனங்களிடம் பங்கு கேட்பதால் ஆந்திர மாநிலத்தில் தொழில் நிறுவனங்கள் அமைக்க முன்வருவதில்லை.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் சித்தூர் மாவட்டத்திற்கு ஹந்திரி நீவா மூலம் குடிநீர் வழங்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவடைந்தது. அதற்குள் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் வந்தது. இதுவரை மீதமுள்ள 25சதவீதம் பணிகளை ஆளும்கட்சி அரசு பணிகள் முடிக்கவில்லை.

இதனால் சித்தூர் மாவட்டத்துக்கு குடிநீர் வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்தும் பொது மக்களிடையே வீடு வீடாகச் சென்று ஆளும்கட்சி செய்யும் அராஜக செயல்கள் குறித்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு  செய்த நல திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம்  வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, சித்தூர் மண்டல தலைவர் மோகன்ராஜ், துணைத்தலைவர் மேஷாக், பொருளாளர் சோபன் பாபு உள்பட ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

Tags : MLC ,Telugu Desam Party ,YSR Congress ,Andhra Pradesh , Chittoor: Telugu Desam Party MLC door-to-door leaflet on the anarchic activities of the ruling party in Andhra Pradesh in Chittoor.
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....