கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). கொரோனா தொற்று பாதிப்பிற்காக கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறியும் இருந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சுப்பிரமணி நேற்று உயிரிழந்தார். கோவையில் கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற முதியவர் உயிரிழந்தது முதல் பலியாகும். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு அறிகுறிகள் இருந்தது. கருப்பு பூஞ்சை நோய் தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. சர்க்கரை பாதிப்பு, கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தால் அவர் உயிரிழந்தார் என்றார்….
The post கருப்பு பூஞ்சைக்கு முதியவர் பலி appeared first on Dinakaran.