×

காஷ்மீரில் தர்மபுரி ராணுவ வீரர் விபத்தில் பலி: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

தர்மபுரி: தர்மபுரியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் நடந்த விபத்தில் பலியானார். அவரது உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் பூபதி(25). திருமணம் ஆகாதவர். இவர் ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி ராணுவ வாகனத்தில் பணிக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பூபதி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கம்மாளப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவவீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன், பூபதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. …

The post காஷ்மீரில் தர்மபுரி ராணுவ வீரர் விபத்தில் பலி: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Kashmir ,Hometown government ,Jammu ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!