×

தமிழக உள்ளாட்சிகளில் மலர்ந்த தாமரை : #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்யும் பாஜக!!

சென்னை : கடந்த 19ம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, நாகர்கோவில் மாநகராட்சி ஒன்பதாவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா தேவ் வெற்றி பெற்றுள்ளார்.மதுரை மாநகராட்சியில் 86வது வார்டு பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ வெற்றி பெற்றுள்ளார்.  இதேபோல்  கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.  

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி நாலாவது வார்டில் பணகுடியில் மொத்தம் 68. 03 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.  இதில் அதிமுக வேட்பாளர் உஷா மற்றும் பாஜக வேட்பாளர் மனுவேல் இருவருமே சம அளவில் வாக்குகள் பெற்றிருந்தனர்.  இதனால் வெற்றி வேட்பாளரை அறிவிக்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது.இரண்டு வேட்பாளர்களும் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தால் இருவருக்கும் குலுக்கல் முறையில் வெற்றி கணிக்கப்பட்டது.  இதையடுத்து நடந்த குழுக்களில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 31வது வார்டு பாஜக வேட்பாளர் சீதா லட்சுமி வெற்றி பெற்றுள்ளார். கடலூர் மாநகராட்சியின் 28வது வார்டில் பாஜக வேட்பாளர் சக்திவேலு வெற்றி பெற்றார்.இதையடுத்து, இந்த வெற்றியை #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பதிவிட்டு இந்தியா டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Tags : Bajaka Trent , Urban Local Election, Win, Hashtag, Trend, BJP
× RELATED 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ...