×

பஜ்ரங் தளம் பிரமுகர் படுகொலையால் கர்நாடகாவில் மீண்டும் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் ஷிவமொக்கா மாநகரில் கலவரம் வெடித்துள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் பலர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாநகர் பாரதிநகர் காலனியில் நேற்று முன்தினம் இரவு பஜ்ரங் தள அமைப்ைப சேர்ந்த பிரமுகர்  ஹர்ஷா(25) என்பவரை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஹர்ஷா படுகொலை செய்யப்பட்ட தகவல் காட்டு தீப்ேபால் பரவியது. மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ெகாலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து ஷிவமொக்கா மெக்கான் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று காலை ஹர்ஷா உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது, நூற்றுக்கணக்கான இந்து அமைப்பு தொண்டர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அஜத் நகர் பகுதி வழியாக ஆம்புலன்ஸ் சென்றபோது, திடீரென சிலர் கல்வீசி தாக்குல் நடத்தினர். சாலையில் நிறுத்தி வைத்திருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

அஜத்நகரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலம் மீதும் தாக்குதல் நடத்தி தீ வைத்ததால், தர்கா முழுவதும் தீக்கிரையானது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது காந்திநகர், கே.ஆர்.புரம், சித்தையா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கலவரமாக பரவியது. உடனடியாக ஷிவமொக்கா நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், மாவட்ட மற்றும் மாநில ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.  144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆர்.செல்வமணி பிறப்பித்ததுடன், உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் வழங்கினார்.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். அப்போது கலவரத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஹர்ஷா கொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் பசவராஜ்பொம்மை உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஹிஜாப் விவகாரத்தில் சமீபத்தில் கர்நாடகாவில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரம் மீண்டும் பீதியை கிளப்பி உள்ளது.

3 பேர் கைது: மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, `இந்த கொலை சம்பவத்தில் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். கொலை ெதாடர்பான உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதுடன், கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்கப்படும். மக்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்’ என்றார்.

Tags : Bajrang Dal ,Karnataka , Bajrang Dal riots: Another riot in Karnataka: Tensions over police firing
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!