×

ஜெயலலிதா செல்வ வரி வழக்கில் சேர்க்க தீபக், தீபாவுக்கு காலஅவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சேர்ப்பது குறித்து பதில் அளிக்க அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, தீபக் விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008-2009ம் ஆண்டுக்கான செல்வ வரி தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 2008ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.  

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணபிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், வருமானவரித்துறை தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags : Deepak ,Deepa ,Jayalalithaa ,ICC , Deepak, Deepa allowed to join Jayalalithaa's wealth tax case: ICC order
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...