சென்னை: 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்கிறார். கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமையுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.