×

காங்கிரஸ் அல்லாத அணியில் சிவசேனா இடம் பெறாது :மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து

டெல்லி : காங்கிரஸ் அல்லாத அணியில் சிவசேனா இடம் பெறாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிவசேனா கட்சியும் மராட்டிய முதல்வருமான உத்தவ் தாக்கரேவை தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அணி தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என்றார்.

உத்தவ் தாக்கரேவும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த தலைவரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவது என்பது குறித்து விரைவில் ஆலோசனை நடைபெறும் என்றார். இது தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், காங்கிரஸ் இடம்பெறாத அணி ஒன்றை உருவாக்க திட்டம் இல்லை என்றார். மேலும் அவர் பேசியதாவது, 3வது அணிக்காக அனைவரையும் வழிநடத்தி செல்லும் திறன் கே. சந்திர சேகர ராவிடம் உள்ளது. அனைத்து கட்சிகளையும் அவர் அரவணைத்து செல்வார் என்று நம்புகிறோம். 3வது அணியை உருவாக்க மம்தா முயன்ற போதும் அணியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என சிவசேனா தெரிவித்தது, என்றார்.


Tags : Congress ,Sivasena ,Sanjay Rawat , சிவசேனா,சஞ்சய் ராவத் ,காங்கிரஸ்
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...