சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிலையில் நேற்று 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நேற்று 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 3,172 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 33 லட்சத்து 91 ஆயிரத்து 011 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,938 ஆக உள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 37,980 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிக பட்சமாக சென்னையில் 223, கோவை 136 என இரண்டு மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்ைக நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது.