சென்னை: சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பாஜக எம்.பி. எல்.முருகன் வாக்களித்தார். 5 மணிக்கு மேல் வந்த நிலையில் அவருக்கான டோக்கனை பெற்று 5.10 மணிக்கு வாக்கை பதிவு செய்தார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்த உடன் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி, கோரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.