×

இயந்திர கோளாறு: தாம்பரம் நகராட்சி 40வது வார்டில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம்

சென்னை: தாம்பரம் நகராட்சி 40வது வார்டில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 40வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 277 வாக்குகளே பதிவான நிலையில் 2,177 வாக்குகள் பதிவு என காட்டியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக காட்டியதால்  வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Tags : Municipal 40th Ward of Dambaram , Tambaram Municipality 40th Ward, Polling, Stop
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...