×

காதல் கணவனுடன் சேர்த்து வைக்ககோரி இளம்பெண் தர்ணா போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் லட்சுமி(23). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். அவரது வீடு அருகில் உள்ள புருஷோத்தமன் என்பவரது மகன் சின்னராசுவை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள அமேசான் விநியோக பிரிவில் வேலை செய்து வரும் சின்னராசு, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததால் லட்சுமி கர்ப்பமானார். இதேபோல், 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார். இந்நிலையில், சின்னராசுவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சின்னராசுவின் பெற்றோரிடம் சென்று சின்னராசு தன்னை காதலித்ததாதகவும், தற்போது வேறு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என கேட்டதற்கு தகாக வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனையடுத்து, இளம்பெண் லட்சுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையில், திருமணம் செய்வதாக கூறி ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இருதரப்பு உறவினர்கள் ஒரு சிலர் முன்னிலையில் சின்னராசு லட்சுமிக்கு தாலி கட்டியுள்ளார். இதனையடுத்து, தேவாலயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சின்னராசு மனைவி லட்சுமியை கீழே இறக்கிவிட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறி தலைமறைவானார். வெகுநேரமாகியும் அவர் வராததால் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சின்னராசு குடும்பத்தார் யாரும் இல்லாததால் லட்சுமி ேமலும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து நடுரோட்டில் விட்டு சென்ற சின்னராசு மீது நடவடிக்கை எடுக்ககோரி கணவன் சின்னராசு வீட்டு வாசலில் அமர்ந்து நேற்று லட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். லட்சுமிக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் மோகனா உள்ளிட்ட பலரும் ஆதரவு கொடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மெய்யூர் கிராமத்தில் பரபரப்பாக ஏற்பட்டது.




Tags : Tarna ,Periyapalayam , Ask to be put together with a loving husband Young girl Tarna protest: agitation near Periyapalayam
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...