×

விலை போகாத கொலுசை கொடுத்து வாக்காளர்களுக்கு அதிமுக ‘பெப்பே’: பெண்கள் செம கடுப்பு

நாமக்கல்: குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் கொடுத்த கொலுசுகளை விற்று காசாக்க நகைக்கடைக்கு சென்ற பெண்களிடம், இது போலி கொலுசு எடுத்துட்டு போ, இல்லை போலீசை கூப்பிடுவேன் என கடை உரிமையாளர் திட்டியதால் அதிர்ச்சியடைந்த பெண்கள், அதிமுக மீது செம கடுப்பில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 188 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி நாளான நேற்று தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அதிமுக வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர 33 வார்டுகளிலும் திடீரென கொலுசு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். பள..பள வென மின்னிய கொலுசை, புதுமெருகு கலையும் முன்பாக விற்று ₹3 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் வரை காசாக்கிவிட வேண்டும் என்று, 11வது வார்டை சேர்ந்த பெண்கள் இருவர், கடைவீதியில் உள்ள நகை கடைக்கு சென்றனர்.

கொலுசை வாங்கி பார்த்த கடைக்காரர் அதிர்ச்சியடைந்தார். அவர்கள் கொண்டு வந்தது. கல் வெள்ளி எனும் சில்வர் கொலுசு ஆகும். ₹200க்கு சந்தையில் விற்கப்படும் கொலுசு என்றார். இதை கேட்ட பெண்கள், நகைக்கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து கடைக்காரர்கள் இந்த கொலுசுக்கு காசு கொடுக்க முடியாது. எடுத்துட்டு போகவில்லை என்றால், போலீசை கூப்பிடுவேன் என கடுப்பானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் இருவரும், ஏமாற்றத்தோடு திரும்பி வந்தனர். அதிமுகவினர் கொடுத்தது வெள்ளி அல்ல... விலைபோகாத எவர்சில்வர் கொலுசு என்ற தகவல் குமாரபாளையம் முழுவதும் பரவியது.  இதனால் அதிமுக மீது பெண்கள் செம கடுப்பில் உள்ளனர்.

Tags : AIADMK ,Pepe , Inexpensive, colossal, to the electorate, AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...