×

மே 21-ம் தேதி குரூப் 2, குரூப் 2A தேர்வு : முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு தேதி இன்று வெளியாகியுள்ளது. 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இன்று செய்தியளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே.21ம் தேதி நடைபெறும். பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ம் தேதி விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.

அத்துடன் குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் , குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழி தகுதித் தேர்வாக இருக்கும். பொது அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்கள்,  நுண்ணறிவு கேள்விகளுக்கு 25 மதிப்பெண்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது . குரூப் 2 நிலையில் 116 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது,  குரூப்-2 ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2 தேர்வுகள் 3 கட்டங்களாக நடைபெறும்.மே மாதத்தில்  ப்ரீலிம்ஸ் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் மேன்ஸ் தேர்வும் நடைபெறும். 3வது கட்டமாக நேர்காணல் நடைபெறும்.

தேர்வுகள் இனி காலையில் 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.பிற்பகலில் நடைபெறும் தேர்வு வழக்கம் போல் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். 32 நகரங்களில் 117 மையங்களில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வின் போது கருப்பு மை கொண்ட பேனா, ஜெல், பால்பாயிண்ட் பேனா பயன்படுத்த வேண்டும்.காவல்துறையில் சிறப்பு பிரிவு உதவியாளர் பணிக்கு முதன்முறையாக தேர்வு நடத்தப்படுகிறது. 2 தேர்வுகளையும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.வருகிற 23-ம் தேதி குரூப் 2 ,குரூப் 2 ஏ  தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும், என்று கூறினார்.


Tags : DNSC , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,குரூப் 2, குரூப் 2ஏ
× RELATED மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும்...