×

கோராக்பூர் ரயில் நிலையத்தில் 426 ஆமைகள் பறிமுதல் வாலிபர் கைது

கோரக்பூர்: கோரக்பூர் ரயில் நிலையத்தில் உத்தரபிரதேச போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டனர். அதில் 426 ஆமைகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடத்தி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

இந்த ஆமைகளை மேற்கு வங்கத்தில் விற்பனைக்காக எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து ஆமைகளையும் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கைதான வாலிபரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Walibur ,Korakpur , Gorakhpur, railway station, 426 turtles, confiscated
× RELATED போலீசாரை தாக்கிய வழக்கில் சென்னை வாலிபர் உள்பட 5 பேர் கைது