சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவரான மருத்துவர் சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியருக்கான நடத்தை விதியை மீறிய புகாரில் மருத்துவர் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. துறை ரீதியான விசாரணை நடைபெறும் வரை பணியிடை நீக்கம் தொடரும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.