×

மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுகவின் சாதனைகளை கூறி மலர்விழி குமார் தீவிர பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார் முருகன் கோயில் தெரு, வடராயன் தெரு, தேரடி தெரு ஆகிய பகுதிகளில் நேற்று அப்பகுதி பெண்களுடன் ஊர்வலமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.வாக்காளர்கள் மத்தியில் மலர்விழி குமார் பேசுகையில், ‘பால் விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதியாக ₹4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் திட்டம் உள்ளிட்டவை திமுகவின் பல்வேறு சாதனைகளில் அடங்கும்.

இதுபோன்ற சாதனைகள் தொடரவும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க திமுக ஆட்சியில் மட்டுமே முடியும். எனவே, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என என்றார்.
தொடர்ந்து, மாலையில் மதுராந்தகம் நகராட்சி 2வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும் மதுராந்தகம் திமுக நகர செயலாளருமான கே.குமாரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு செல்லியம்மன் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பஸ் நிலையம், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள் தொழிலாளர்கள் உள்பட அனைவரிடமும் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.



Tags : Malarvizhi Kumar ,Madurantakam ,DMK , Madurantakam Municipality 17th Ward Malarvizhi Kumar's intense campaign claiming DMK's achievements
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு