×

தாம்பரம் முத்துரங்கம் பூங்கா சீரமைக்கப்படும்: திமுக வேட்பாளர் காமராஜ் உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ் வார்டு முழுவதும் உள்ள பொதுமக்களை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.அந்த வகையில் 49வது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களை அவர் நேற்று நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குசேகரித்தார். தாம்பரம் முத்துரங்கம் பூங்கா கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்காவில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு வேட்பாளர் காமராஜ், `முத்துரங்கம் பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.எனவே அதனை சீர்செய்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக பூங்காவை சீர் செய்வதுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வேன்’ என உறுதியளித்தார்.இதில் பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், க.ஹரிஷ்குமார், பா.ஹரிஷ் (எ) அன்பழகன், எஸ்.ரமேஷ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




Tags : Tambaram Muthurangam Park ,DMK ,Kamaraj , Tambaram Muthurangam Park to be renovated: DMK candidate Kamaraj
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...