×

166வது மற்றும் 167வது வார்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி எம்பி பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலம் 166வது வார்டு திமுக வேட்பாளர் என்.சந்திரன் மற்றும் 167வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன் ஆகியோரை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நங்கநல்லூர், பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார்.அப்போது, அவர் பேசுகையில், `திமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை ₹1000 உங்களை வந்தடைய உள்ளது. இலவச பஸ் பயணம், வங்கிக் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு அறிவிப்புகளால் முதல்வர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் பலதிட்டங்கள் உங்களை சேர்ந்தடைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்’ என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராமன் மார்த்தாண்டன், வட்டச்செயலாளர்கள் ஜெ.நடராஜன், இ.உலகநாதன், ஏசுதாஸ், மு.சத்யா, எல்.காசி, ஸ்ரீகாந்த், அபிஷேக், வெள்ளைச்சாமி, செல்வம், மாரிமுத்து, வேல்முருகன், கேபிள் ராஜா, லத்தீப், கண்டோன்மெண்ட் சி.முத்து, ஆனந்தராஜ், மாறன் இஸட் பாபு, பி.ஆர்.சுரேஷ், விக்னேஷ், பாண்டிச்செல்வி, விஜயலட்சுமி, காங்கிரஸ் சார்பாக மாவட்ட துணை தலைவர் அய்யம்பெருமாள், கனிபாண்டியன், குருபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : RS ,Bharathi ,DMK , campaigns
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...