×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நத்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 50%க்கு அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் அந்த பள்ளிகளுக்கு 18-ம் தேதியும் விடுமுறை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உள்ளது. ஆகையால் ஆசிரியர்கள் தேர்தல் நடக்கும் மையங்களுக்கு முதல் நாளே செல்லக்கூடும். ஆகையால் 50%க்கு அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் முதல் நாளும் விடுமுறை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குகள் வரும் 22-ம் தேதி எண்ணப்பட உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

Tags : SchoolDepartment , Urban Local Election, School, Holidays, Commissioner
× RELATED கோடை விடுமுறையில் பணியாற்றிய முதுகலை...