×

அரசு தோட்டத்தில் பூக்கள் பூக்காததால் தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு!!!

வடகொரியா: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தந்தையின் பிறந்தநாளான இன்று, அரசு தோட்டத்தில் பூக்கள் ஏதும் பூக்காததால் கோபமடைந்த வடகொரிய அதிபர், அனைத்து தோட்ட தொழிலாளர்களை சிறை முகாமுக்கு அனுப்பியுள்ளார். ஏவுகணை சோதனைக்கு பெயர்பெற்ற வடகொரியா கிம் ஜாங் உன், சர்வாதிகாரத்திற்கும் பெயர் பெற்றவர். கடந்த ஆண்டு டிசம்பரில் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்-இல் நினைவு நாளை முன்னிட்டு 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

அதனையொட்டி மக்கள் சிரிக்கவோ, மது அருந்தவோ, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கவோ தடை விதிக்கப்பட்டது. கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை, ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடுவார். இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 16 ஆன இன்று கிம் ஜாங்-இல்லின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம், வட கொரியாவின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த நிலையில் தமது தந்தையின் பிறந்தநாளுக்கான பூக்கள், அதுவும் அவர் பெயரிலேயே அறியப்படும் பூக்கள் குறிப்பிட்ட நாளில் பூக்கவில்லை என கிம் ஜாங் உன் இடம் தெரிவிக்கப்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்துள்ள கிம் ஜாங் உன், தோட்டக்காரர்கள் குழு ஒன்றை அதிரடியாக சிறை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சம்சூ மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான ஹான் என்பவரே தோட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தற்போது 6 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1988ல் வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஜப்பானிய தோட்டக்கலை நிபுணர் ஒருவரால் கலப்பின முறையில் புதிதாக உருவாக்கப்பட்ட பூ தான் கிம்ஜோங்கிலியாஸ். இந்த பூ தற்போது மலரவில்லை என்பதாலையே ஹான் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


Tags : Korean ,President ,Kim Jong Un , Government, Garden, Flowers, Labor, Prison, North Korean President, Kim Jong Un
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...