சென்னை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இன்று காலை தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் (சி.எஸ்.ஐ) நேரில் சந்தித்தனர். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.