ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆதி கருவண்ணராயர் கோயிலில் மாசி மகம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு செல்ல 100 வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறை அனுமதித்த நிலையில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்கக் கோரி காராச்சிக்கொரை சோதனை சாவடியை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.