சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், நேற்று சிஐடி நகர் மற்றும் கண்ணம்மாப்பேட்டை, லலிதாபுரம், காமராஜர் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி பங்கேற்று, ராஜா அன்பழகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியில் ராஜா அன்பழகன் பேசுகையில், ‘‘அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், தேர்தலில் 50 சதவீதம் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு செய்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் தவித்த மக்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் போன்ற மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம், எல்.குமரன், ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.