திருச்சி: திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பொதுக்கூட்டத்தில் உரையாடிய அவர், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.