×

திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதையாத்திரையாக வந்த பக்த்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: 3 பேர் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதையாத்திரையாக வந்த பக்த்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பல பிரிவுகளாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதையாத்திரையாக வந்தனர்.

அவர்களில் ஒரு குழுவினர் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டியான் பட்டி என்ற இடத்தில் அதிகாலையில் நடந்துவந்த போது ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து தக்காளி லோடு ஏற்றிவந்த சரக்கு வாகனம் நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளார். மேலும் ஒருவர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெண் ஒருவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளார். மேலும் காயமடைந்த 4 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் ஒருவர் எரியூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பதும், மற்றொருவர் சீகம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி சென்ற சரக்கு வாகன ஓட்டுநர் சிவசக்தி மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றார்.


Tags : Samayapuram Temple ,Tirichi , Samayapuram temple, pedestrian, truck accident, killed
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...