திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை போயுள்ளது. மருத்துவர் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களான கணவன், மனைவியை கட்டிபோட்டு ரூ. 20 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.