×

வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் திடீர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் முத்தையா (43) உள்பட 8 பேர் போட்டியிட்டனர். பிப். 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி முத்தையா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு வீடு, வீடாகச் சென்று  அவர் வாக்கு சேகரித்தார். நேற்று அதிகாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து டூவீலரில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திமுக ஒன்றிய செயலாளர் முனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். வத்திராயிருப்பு போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மேகநாத ரெட்டி, வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு தேர்தலை ஒத்தி வைத்துள்ளார். மரணமடைந்த முத்தையாவிற்கு சுந்தரலட்சுமி என்ற  மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.



Tags : DMK ,Vathirairuppu , வத்திராயிருப்பு Municipality 2nd Ward DMK candidate dies of heart attack: Election postponed
× RELATED மாநகர் மாவட்ட திமுக சார்பில் மக்களின்...