ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத்தை ஆதரித்து, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆதம்பாக்கம் சக்தி நகர், சரஸ்வதி நகர் போன்ற பகுதிகளில் உள்ள நலச்சங்க நிர்வாகிகளிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தை நீங்கள் வெற்றி பெற செய்தால், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார். அருகில் உள்ள பூங்காவிற்கு கட்டிடம் கட்டித் தந்தவர். உங்கள் பகுதியின் கோரிக்கையான சிசிடிவி கேமராக்கள் அமைத்து தருவார். இந்த பகுதியின் அடிப்படை வசதிகளை செய்து தருவார்.
மக்கள் எளிய முறையில் அவரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம். அதனை உடனே நிறைவேற்றி தருவார்,’’ என்றார். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், திமுக நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜி.ரமேஷ், லியோ பிரபாகரன், ஆர்.பாபு, சேது செந்தில், வழக்கறிஞர் ஆனந்த் குமார், கிறிஸ்டோபர் சுப்புராஜ், ராஜேஷ், கணேசன், பிரபு, பெருமாள், ராஜ்குமார், ராஜேந்திரன், பால்ராஜ், கிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் பி.எஸ்.ராஜ், லயன் காமராஜ், நேரு ரோஜா, ஐ.செல்வம், எஸ்.வடிவேல், சுரேஷ் ஸ்ரீராம், எஸ்.ரமேஷ் ஜெய்கணேஷ் மற்றும் நல சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.