மதுரை: மதுரை ஈஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக்கோரி தாயார் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை காவல் ஆணையர், தல்லாங்குளம் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 19ல் காவல்துறை விசாரணைக்கு சென்றுவந்த தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக தாயார் புகார் அளித்திருந்தார்.