×

மூத்த புகைப்படக் பத்திரிகையாளர் குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி..!!

சென்னை: மூத்த புகைப்படக் பத்திரிகையாளர் குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது. தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் நம் நெஞ்சில் பேரிடியாக விழுந்தது என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தெரிவித்திருக்கிறது. உழைப்பால் படிப்படியாக உயர்ந்து யுஎன்ஐ செய்தி நிறுவன சென்னை கிளை தலைமை நிர்வாகி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர். சக பத்திரிகையாளர்களிடம் அன்போடு பழகும் தன்மை கொண்டவர், அவரது மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று. பத்திரிகையாளர் குமாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

5 ஆண்டுகளாக சம்பளம் தராததால் நியூஸ் ஏஜென்சி போட்டோகிராபர் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். போட்டோகிராபர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே புகைப்பட கலைஞர் குமார் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலைகளிலும் செய்தியாளர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Chennai Press Club ,Kumar , Senior Photo Journalist Kumar, Deceased, Press Club
× RELATED பெண்ணிடம் தவறாக நடந்த பிஸியோதெரபிஸ்ட் கைது