×

திருப்பூர் அருகே பனியன் நிறுவன ஊழியர் தலை துண்டித்து கொலை: போலீசார் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவினை பகுதியை சேர்ந்த 22 வயதான ரஞ்சித் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 23 வயதான சதிஷ் ஆகியோரும் திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். நேற்று ஞாயிறுக்கிழமை விடுமுறை என்பதால் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் காட்டு பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அதற்கு இருவரும் மறுக்கவே அவர்களை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியுள்ளார். இரத்த காயத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்ற ரஞ்சித் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்று கூச்சலிட்டு உதவி கோரியுள்ளார். அவரது நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் ரஞ்சதை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அவர் தெரிவித்த தகவலின் பேரில் போலீசாரும் அப்பகுதி மக்களும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு சதிஷ் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டனர். அவரது தலையை வழிப்பறி கும்பல் துண்டித்து எடுத்து சென்றது தெரியவந்தது. சதிஷ் தலையை அந்த கும்பல் எங்கே வீசி சென்றனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வரும் ரஞ்சித்திடமும் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Banyan ,Tiruppur , Beheading of Banyan Company employee near Tiruppur: Police are conducting a serious investigation
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்