×

தட்டாம்பாறை அங்கன்வாடி அருகே தடுப்புச்சுவரை உயர்த்த கோரிக்கை

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி அய்யன்கொல்லி தட்டாம்பாறை அங்கன்வாடி அருகே உயரமான மண்திட்டு உள்ளது. மழைக்காலங்களில் அடிக்கடி மண்திட்டு இடிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் மண்திட்டு சரிவை தடுப்பதற்கு அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி சேரங்கோடு ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து மண்திட்டு அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்று பணிகள் நிறைவு பெற்றது.
ஆனால், இடிந்து விழுந்துள்ள மண்ணை முழுமையாக அகற்றாமல் மிக சிறிய அளவில் தரமற்ற முறையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மண் திட்டு இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மண்திட்டு அருகே உயரமான நிலையில் தரமான தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thattampara Anganwadi , Pandalur: Near Pandalur, there is a high mound near Ayyankolli Thattampara Anganwadi in Serangode panchayat. In the rainy season
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...