×

வாக்கு சேகரிப்பில் புது யுக்தி... மாட்டுச்சாணி அள்ளி ஓட்டு கேட்ட பெண் வேட்பாளர்

ஓசூர்: வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஓசூர் மாநகராட்சியில் 11வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரூபா நந்தகுமார், வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார். அப்போது, அவர் ஒரு வீட்டின் முன்பு குவிந்திருந்த பசுமாட்டு சாணத்தை கூட்டி பெருக்கி கூடையில் அள்ளிக் கொட்டினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் நமட்டு சிரிப்புடன், ஓட்டு கேட்டு வரும்போது சாணி அள்ளி வாக்கு சேகரிப்பவர்கள், தேர்தல் முடிந்து போய் நின்றால், அவர்கள் வீட்டு சாணத்தை நம்மை வைத்து அள்ள வைப்பார்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

Tags : Yukti , New tactic in ballot collecting
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...