×

டிராபிக் எஸ்ஐ மீது தாக்குதல்

சென்னை: சென்னை அண்ணாநகர்,6வது அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பைக்குகள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதனால், பைக்குகளில் வந்த வாலிபர்கள் நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருவரையொருவர் தாக்கிகொள்ள முயன்றனர். தகவலறிந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்ஐ மனோகர் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு விசாரித்தார். அதில், அம்பத்தூரில் இருந்து வந்த பிரசாந்த்(22) என்பவர் பைக் மீது, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜீத்குமார்(27) என்பவர் குடிபோதையில் பைக்கை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டிராபிக் எஸ்ஐ மனோகரை தாக்கிவிட்டு அஜீத் தப்பினார். 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அஜீத்குமார்கைதானார்.

Tags : Attack on Tropic SI
× RELATED ரூ.34 லட்சம் கடனை திருப்பி தராததால்...