×

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: சென்னை: பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என  உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல விதமாக பிரசாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அவர், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது பேசியதாவது; நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக முழுமையான வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் மலையளவு ஊழல் அரங்கேறியுள்ளது. சட்டம், ஒழுங்கு சரியில்லாத ஆட்சியை நடத்திய ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோருக்கு திமுக-வின் அரசை பற்றி பேச தகுதி கிடையாது.

கடந்த ஆட்சியின்போது, திமுக வெற்றிபெற்றுவிடும் என்பதால் அதிமுக உள்ளாட்சித்தேர்தலை நடத்தவில்லை.  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தது திமுக அரசு தான். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

Tags : Dimugha ,Md. KKA Stalin , Everyone must work for the success of the DMK and Coalition Party candidates; Chief Minister MK Stalin's campaign
× RELATED கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்