×

‘லிவ்விங் டூ கெதர்’ விபரீதம் தீக்குளித்த பெண் பலி: வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் (40) மற்றும் இளைச்சி (35) ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் நீண்ட நாட்களாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதையடுத்து இருவரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போடவே அந்த குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து பெரியமேடு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்தனர். இதையடுத்து இளைச்சி என்பவர் உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். மேலும் 60 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தீப் ஜெயினை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Valipar Hospital , Woman killed in ‘Living to Gather’ tragedy: Admitted to Valipar Hospital
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை