×

எம்கேபி நகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு, எம்கேபி நகர் 16வது மத்திய அவென்யூ, 10வது தெரு முதல் 19வது தெரு வரை, மத்திய குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் அவரை வரவேற்று, தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அதற்கு வேட்பாளர் டில்லிபாபு, ‘நான் வெற்றி பெற்றதும் உடனடியாக உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன். எம்கேபி நகர் மத்திய குறுக்கு தெரு பகுதிகளில் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. வடிகால் பணிகள் முறையாக நடைபெறாததே இதற்கு காரணம். எனவே, இங்குள்ள மழைநீர் கால்வாய்களை விரைந்து சீரமைப்பேன். மேலும், அருகிலேயே எம்கேபி நகர் கால்வாய் செல்வதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. அதற்கும்  தீர்வு காண்பேன். தெருக்களில் சிசிடிவி கேமரா, தரமான குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்வேன்,’ என்றார்.

Tags : MKB Nagar ,Congress ,Dillibabu , Rainwater canals in MKB Nagar area to be rehabilitated: Congress candidate Dillibabu
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் சிக்கினர்