×

சிஐடி நகர், ஒய்எம்சிஏ பள்ளிவாசலில் பிரசாரம்; இஸ்லாமியர்கள் கோரிக்கை நிறைவேற்றுவேன்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா அன்பழகன் தினசரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று சிஐடி நகர், ஒய்எம்சிஏ பள்ளிவாசல் மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு, இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பளித்து, ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர், சிறுபான்மையினர் நலன் காக்க திமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்து கூறி ஆதரவு திரட்டினார். மேலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

பிரசாரத்தின்போது, கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை, வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எஸ்.ராமலிங்கம், எல்.வீரப்பன், ஜெ.ஜஹாங்கீர், நசீப்கான், ம.அ.நூர்அகமது, எம்.ஏ.அஷ்ரத், ஜெ.அஜ்மல்கான், எஸ்.ஷேக் அகமது, எஸ்.நூர்தீன், இக்பால், கே.ரபீக் அகமது, பைசல், பிஸ்மி, எஸ்.சாதிக், முனீர் அலி, ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் திமுக முன்னோடிகள், நிர்வாகிகள்,  அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.


Tags : CIT Nagar ,YMCA Schoolhouse ,Islamists ,Dimuka ,Raja Abbhagan , Propaganda at the YMCA Mosque in CIT Nagar; Islamists will fulfill the demand: DMK candidate Raja Anpalagan confirmed
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்