×

சிஎஸ்கே வீரருக்கு குறிவைக்கும் ஆர்சிபி

மும்பை: ஐபிஎல் 2022 டி20 தொடருக்கான மெகா ஏலம் நாளை, நாளை மறுதினம் (12, 13ம்தேதிகளில்) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிக்கு தேவையான வீரர்களை வாங்க, அனைத்து அணிகளும் திட்டம் வகுத்து வருகிறது. குறிப்பாக, ராயல்சேலஞ்சர்ஸ் அணி திறமையான, தகுதியான வீரர்களை ஏலம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. காரணம், கேப்டன் பதவியிலிருந்து கோஹ்லி விலகிவிட்டதால் அந்த அணிக்கு திறமையான, வெற்றிகரமான கேப்டனை ஏலத்தில் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஜேசன் ஹோல்டர், ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர் ஆகிய அனுபவமிக்க கேப்டன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரை வாங்க நிச்சயம் ரூ.10 கோடிக்கு மேல் செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே கோஹ்லியை 15 கோடிக்கு தக்கவைத்துள்ளதால், புதிய கேப்டனுக்காக 15 கோடிவரை செலவு செய்யவும் ஆர்சிபி அணி தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கிளென்மேக்ஸ்வேலையே கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் கசிகிறது. இந்நிலையில், அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடுவை ரூ.8 கோடிக்கு வாங்க, தொகையை ஒதுக்கிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் அம்பதி ராயுடு, தனது பெயரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரிவில் இடம்பெறச் செய்துள்ளார். இவரை அணியில் சேர்த்தால் விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரச்னை தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : RCB ,CSK , RCB targeting CSK player
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...