×

நாடு முழுவதும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11% வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,035 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11.8% அதிகம். 2020- ல் பதிவான 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடியை உள்நோக்கமாக கொண்டவை என்றும், இது மொத்த வழக்குகளில் 60.2% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6.6% வரை, அதாவது 3,293 வழக்குகள் பாலியல் தொடர்புடையவை என்றும் கூறப்பட்டுள்ளது.

புதுப்புது வழிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஒரு சைபர் குற்ற விசாரணை அமைப்பு கூட இதுவரை நிறுவப்படவில்லை என்றும், எனவே மாநில அரசுகள் சைபர் குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்ற விசாரணை அமைப்புகளை நிறுவ வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.         


Tags : National Crime Document Archive , Country, Most, Cyber Crime, National Crime Archive, Report
× RELATED இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீது...