×

சித்தையன்கோட்டையில் பாம்புகளின் கூடாரமான பாழடைந்த பள்ளி கட்டிடம்-இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

சின்னாளபட்டி : சித்தையன்கோட்டை பாம்புகளின் கூடாரமாக மாறிய பாழடைந்த பள்ளிக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுலகம் பின்புறம் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் முற்றிலும் சேதமடைந்ததால் வகுப்பறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் மையமாக அதனை பயன்படுத்தி வந்தனர்.

அதன்பின் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால், இந்த கட்டிடம் பயன்பாடின்றி உள்ளது. இந்நிலையில் தற்போது அந்த கட்டிடத்தில் அதிகளவில் பாம்புகள், தேள், பூரான் உள்ளிட்ட விஷஐந்துகள் உள்ளன. இந்த கட்டிடத்திலிருந்து வெளியேறும் விஷஐந்துகள், அருகில் உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இதனால் அப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி, இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அகற்றி விட்டு, அப்பகுதிமக்களுக்கு பயன்படும் வகையில் புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Sithayankottai , Chinnalapatti: The public wants the demolition of the dilapidated school building which turned Sithayankottai into a snake tent.
× RELATED சித்தையன்கோட்டையில் 10 பேரை கடித்து...